‘மாற்றங்கள் என்பது மாறாதது’ என்பதற்கு பிளாக்கன் மட்டும் விதிவிலக்கல்ல. அதனால் தான் என்னுடைய பிளாக்கின் ஹெட்டர் மாற்றப்பட்டதுடன் பதிவுகளை எழுதும் முறையும் மாற்றம் செய்யப்பட்டு விட்டது. அதேவேளையில் எனக்கு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாதங்கள் உங்களுடைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பையும் இழந்து விட்டேன்.
அதேவேளையில், நானும் புதிய பதிவுகளை வெளியிடவுமில்லை. நீண்ட இடை(வேளை/வெளி)க்குப் பிறகு இந்தப் பதிவை வெளியிடுகிறேன். இனி தொடர்ந்து எழுத முடியும் என்றே நினைக்கிறேன்.
சில நண்பர்கள் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்குக் கூட பதில் பின்னூட்டம் இட முடியவில்லை. இந்த இடைவெளியை எனக்கு ஏற்பட்ட விபத்தாகவே கருதுகிறேன்.
பிபத்துக்கள் ஏற்படுவதும், அந்த விளைவிலிருந்து மீண்டு வர சில காலங்கள் எடுத்துக் கொள்வதும் புதியது அல்ல.
பிளாக்கன்
வாருங்கள் வாருங்கள். வந்து எழுதுங்கள்.
By: ஊர்சுற்றி on நவம்பர் 8, 2009
at 10:24 முப